ஶ்ரீலஶ்ரீ வாலைச்சித்தருக்கு ஶ்ரீ அகத்திய மாமுனிவர் அருளாசி வழங்குதல் 24-5-2012ல் ஶ்ரீலஶ்ரீ வாலைச்சித்தருக்கு அருளப்பட்டது
- Paramathmah Shakti Beedam
- Jul 7, 2024
- 1 min read
Updated: Jul 30, 2024

ஆதியான பராபரத்தின் பாதம் வணங்கி
அடிபணிந்து அகத்தியன்யான் வாக்கு சொல்வேன்
சோதியுடன் என் மைந்தன் வாலைசித்தன் வாழ
வாழ்க வாழ்க உன் தொண்டு வளர ஆசி
வெற்றி மேலும் மிகையாக வளர ஆசி
வாழ்வளிக்கும் உந்தன் வாக்கு சித்தியாகும்
வழி காட்டும் அருள் குருவாய் வாழ ஆசி
தன்மேலாய் உந்தனுக்கு அருள் பலத்தால்
உன்குடிலில் யோக ஞானம் தெளிவடைவார்
உன்சேவை மானிடர்க்கே வாழ்வளிக்கும்
வாழ்வளிக்கும் உந்தனுக்கு பரம்பொருளும்
தீட்சையும் தந்திடுவாய் நாடுவோர்க்கே
எண்ணியே சீடர்பலர் தன்குண்டு
ஏற்றம் தரும் உந்தன் குடில் வளர்க மேலும்
உனக்கு தான காணிக்கையாய் பீடம் தந்தோம்
உயர்வு பெற ஞானிகளும் வாக்கு சொல்வோம்